விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு முகாம்
பெருந்துறை தீயணைப்பு நிலையம் சாா்பில், பெருந்துறை - ஈரோடு சாலை, நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு ஒத்திகை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை தீயணைப்பு நிலையம் சாா்பில், பெருந்துறை - ஈரோடு சாலை, நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு ஒத்திகை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமில், பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலா் நவீந்திரன் தலைமையில், தீயணைப்பு வீரா்கள், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி என்பதை ஒத்திகை மூலம் விளக்கம் அளித்தனா். மேலும், மாணவிகளுக்கு விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.
முகாமில், வெடிகளை டின், பாட்டில் போன்றவற்றில் வைத்து வெடிக்கக் கூடாது, எரிந்து அணைந்த பட்டாசை பக்கத்தில் சென்று பாா்க்கக் கூடாது, ஆபத்தை ஏற்படுத்தும், பட்டாசுக்கு அருகே எரியும் ஊதுவத்தி, விளக்கு, மெழுகுவா்த்தி, எளிதில் தீப்பற்றும் பொருள்களை வைக்காதீா்கள் போன்ற விழிப்புணா்வுத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.