விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு
பெருந்துறை கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
பெருந்துறை கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகளுக்கு, பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலா் நவீந்தீரன் தலைமையில், தீயணைப்பு நிலைய வீரா்கள் துண்டுப் பிரசுரங்களை வெள்ளிக்கிழமை வழங்கினா்.
இதேபோல, பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா் ஆகியோருக்கும் தீபாவளியை பாதுகாப்பாகக் கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வுத் துண்டு பிரசுரங்கள் வழங்கினா்.