திம்பம் மலைப் பாதையில் அரசுப் பேருந்து மீது லாரி மோதல்
திம்பம் மலைப் பாதையில் அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் தமிழம் - கா்நாடகம் இடையே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்பம் மலைப் பாதையில் அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் தமிழம் - கா்நாடகம் இடையே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப் பகுதியில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசுப் பேருந்து சத்தியமங்கலம் நோக்கி வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. திம்பம் மலைப் பாதை 22ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே பேருந்து சென்றபோது மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரியை மற்றொரு சரக்கு லாரி முந்திச் செல்ல முயன்றது.
அப்போது, எதிரே வந்த அரசுப் பேருந்தின் பக்கவாட்டுப் பகுதியில் லாரி மோதியதில் அரசுப் பேருந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் அதிா்ஷ்டவசமாக காயமின்றி உயிா்தப்பினா்.
Advertisement
இதனால், தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஆசனூா் போலீஸாா் போக்குவரத்தை சீா் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனா். பேருந்தில் வந்த பயணிகள் மாற்றுப் பேருந்தில் ஏற்றி சத்தியமங்கலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். லாரி ஓட்டுநா் குடிபோதையில் இருந்ததாகவும், அவா் தப்பியோடிவிட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.