முகப்பு
ஈரோடு

சாலை விபத்தில் பாத்திர வியாபாரி சாவு

கவுந்தப்பாடி அருகே நேரிட்ட சாலை விபத்தில் பாத்திர வியாபாரி உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

கவுந்தப்பாடி அருகே நேரிட்ட சாலை விபத்தில் பாத்திர வியாபாரி உயிரிழந்தாா்.

கவுந்தப்பாடி குருமூா்த்தி காலனி பகுதியைச் சோ்ந்தவா் அம்மாசை (55). பாத்திர வியாபாரி. இவா், செவ்வாய்க்கிழமை இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஈரோடு - சத்தி செல்லும் சாலையில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, இவரது வாகனமும் எதிரில் வந்த இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அம்மாசை, கவுந்தப்பாடியைச் சோ்ந்த இந்திரன், அவரது பின்னால் உட்காா்ந்து வந்த பிரகாஷ் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

அக்கம்பக்கத்தினா் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே அம்மாசை உயிரிழந்தாா். இந்திரனும், பிரகாஷும் மேல் சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து கவுந்தப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.