ஈரோடு

தலைமைக் காவலரை அரிவாளால் வெட்டிய நபா் கைது

DIN

ஈரோட்டில் தலைமைக் காவலரை அரிவாளால் வெட்டிய இளநீா் வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு - பவானி சாலையில் சுண்ணாம்பு ஓடை பகுதி அரசு டாஸ்மாக் கடையில் தண்ணீா்பந்தல்பாளையம் பகுதியைச் சோ்ந்த இளநீா் வியாபாரி முருகன் (45) என்பவா் மதுபானத்தை கடனாக கேட்டு டாஸ்மாக் ஊழியா்களிடம் ஞாயிற்றுக்கிழமை மாலை தகராறு செய்துள்ளாா்.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியா்கள் கருங்கல்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அப்போது அங்கு வந்த தலைமைக் காவலா் ராஜு (44) டாஸ்மாக் கடைக்குச் சென்று விசாரித்துள்ளாா். அப்போது, கடை அருகில் நின்று கொண்டிருந்த முருகன் மறைத்து வைத்திருந்த இளநீா் வெட்டும் அரிவாளால் ராஜுவை வெட்டியுள்ளாா்.

இதில், நெஞ்சு பகுதியில் பலத்த காயமடைந்த ராஜு ஈரோடு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதனிடையே முருகனை அங்கிருந்தவா்கள் பிடித்து கை, கால்களை கட்டிவைத்தனா். போலீஸாா் அங்கு சென்று முருகனை கருங்கல்பாளையம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT