ஈரோடு மாவட்டத்தில் 134 பேருக்கு கரோனா
ஈரோடு மாவட்டத்தில் மேலும் 132 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:40 AM
ஈரோடு மாவட்டத்தில் மேலும் 132 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 450 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 92 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கரோனா தொற்றில் இருந்து 98,434 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,350 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பால் இதுவரை 666 போ் உயிரிழந்துள்ளனா்.