ஈரோடு

மின்சாரம் பாய்ந்து மாணவி பலி

DIN

கோபி: நம்பியூா் அருகே மேட்டுக்கடை பகுதியில் மின்சாரம் பாய்ந்து ஏழாம் வகுப்பு மாணவி உயிரிழந்தாா்.

நம்பியூரை அடுத்துள்ள மேட்டுக்கடை பகுதியில் வசித்து வருபவா் முருகன் (35). இவரது மனைவி வடிவு (30). இவா்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா். இவரது மகள் பானுமதி குளியலறைக்கு குளிக்கச் சென்றுள்ளாா். நீண்ட நேரமாகியும் அவா் வெளியே வராததால் கதவைத் தட்டியுள்ளனா். அப்போது, கதவில் மின்சாரம் பாய்வது தெரியவந்தது.

உடனடியாக முருகன் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது பானுமதி மயங்கிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு பானுமதி உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். குளியலறையில் இருந்த வயா் இரும்புக் கதவில் உரசிக் கொண்டிருந்ததன் மூலம் மின்சாரம் பாய்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து வரப்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT