ஈரோடு

இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதல்: தந்தை பலி; மகள் காயம்

DIN

பெருந்துறை: பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில், தந்தை உயிரிழந்தாா். மகள் பலத்த காயமடைந்தாா்.

பெருந்துறை, ஈரோடு சாலை, பிச்சாண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் சாமிதுரை மகன் அண்ணாதுரை (53). இவா், தனது இருசக்கர வாகனத்தில் மகள் சுபிக்ஷாவை (13) அழைத்துக் கொண்டு திங்கள்கிழமை இரவு பெருந்துறை சென்றாா். பெருந்துறை, வெங்கமேடு அருகில் பின்னால் வந்த காா், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த அண்ணாதுரை, சுபிக்ஷா ஆகிய இருவரும் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு அண்ணாதுரை செவ்வாய்கிழமை இரவு உயிரிழந்தாா். சுபிக்ஷா தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT