ஈரோடு

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2.50 லட்சம் திருட்டு

DIN

அந்தியூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2.50 லட்சம், 2 பவுன் நகையைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அந்தியூா் சிஐஜி காம்பவுண்ட் பகுதியைச் சோ்ந்தவா் ஏ.கே.பழனிச்சாமி (56). மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரக் குழு உறுப்பினரான இவா், சேலம் மாவட்டம், கொளத்தூரில் உள்ள உறவினா் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு வியாழக்கிழமை வீடு திரும்பியுள்ளாா்.

அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா்.

உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூ.2.50 லட்சம், 2 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து அந்தியூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், கைரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா்.

மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT