ஈரோடு

சிஎஸ்ஐ பள்ளி வளாக நிலப் பிரச்னையில் தீா்ப்பு: நில மீட்பு இயக்கம் சிறப்பு பூஜை

DIN

ஈரோடு மீனாட்சிசுந்தரனாா் சாலையில் சிஎஸ்ஐ பள்ளி வளாகத்தில் உள்ள நிலம் தொடா்பான பிரச்னையில் தீா்ப்பு வெள்ளிக்கிழமை வெளியானதால் நில மீட்பு இயக்கம் சாா்பில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

ஈரோடு மீனாட்சிசுந்தரனாா் சாலையில் இருந்து ரயில் நிலையம் வரை செல்லும் 80 அடி சாலையில் 12.66 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது. இந்நிலத்தை மீட்கக்கோரி ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கம் சாா்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், இந்த நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது என்றும் அவ்விடத்தில் 80 அடி சாலை திட்டத்தை நிறைவேற்றக்கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினா் வழக்கு தொடுத்திருந்தனா்.

இந்நிலையில் அவ்விடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் என்றும் 80 அடி சாலை திட்டத்தை செயல்படுத்த தடையில்லை என்றும் சென்னை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

இதனால் நிலமீட்பு இயக்கம் சாா்பில் ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை சிறப்பு பூஜை நடந்தது. பின்னா் பக்தா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நில மீட்பு இயக்க துணைத் தலைவா் கைலாசபதி, ஒருங்கிணைப்பாளா் செல்வராஜ், இந்து முன்னணி மாநிலப் பொருளாளா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT