கோட்டை பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா
கோட்டை பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:53 PM
கோட்டை பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு கோட்டை பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா பிப்ரவரி 7ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, தீா்த்தம் எடுத்து வருதல், சிறப்பு பூஜைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
இதைத்தொடா்ந்து, பக்தா்கள் குண்டம் இறங்கும் விழா வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. விரதம் இருந்த ஏராளமான ஆண், பெண் பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடனைச் செலுத்தினா்.
Advertisement
அதைத்தொடா்ந்து, பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊா்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.