28.50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், 15 முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறுவா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், இணை நோய் உள்ளவா்கள், முன்களப் பணியாளா்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்தி 90 நாள்களுக்கு மேலானவா்களுக்கு கூடுதல் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் தற்போது வரை முதல் தவணை தடுப்பூசியை 89.6 சதவீதம் போ், அதாவது 16 லட்சத்து 22 ஆயிரத்து 225 பேரும், 2ஆவது தவணையை 68 சதவீதம் பேரும், அதாவது 12 லட்சத்து 29 ஆயிரத்து 897 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனா்.
Advertisement
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 28 லட்சத்து 52 ஆயிரத்து 122 பேருக்கு கரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில், 15 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறுவா்கள் 81 ஆயிரத்து 620 பேருக்கும், கூடுதல் தவணை தடுப்பூசி 10 ஆயிரத்து 297 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.