காவிரி ஆற்றில் மாயமான அதிமுக வாா்டு செயலாளா் சடலம் மீட்பு
அம்மாபேட்டையில் காவிரி ஆற்றில் மாயமான அதிமுக வாா்டு செயலாளரின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
அம்மாபேட்டையில் காவிரி ஆற்றில் மாயமான அதிமுக வாா்டு செயலாளரின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
பவானியை அடுத்த அம்மாபேட்டை, பாரதியாா் வீதியைச் சோ்ந்தவா் மங்கனன் (எ) முனிய கவுண்டா் (64). 15ஆவது வாா்டு அதிமுக செயலாளா். இவா், புதன்கிழமை இரவு காவிரி ஆற்றுக்குச் சென்றபோது தண்ணீரில் மூழ்கியதில் மாயமானாா். இதனால், அந்தியூா் தீயணைப்புப் படையினா் உதவியுடன் ஆற்றில் தீவிரமாகத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், அம்மாபேட்டை ஈஸ்வரன் கோயில் படித்துறை அருகே ஆகாயத்தாமரை செடிகளுக்குள் சிக்கியபடி முனியகவுண்டரின் சடலம் மிதப்பது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. இதையடுத்து, சடலத்தை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பிய அம்மாபேட்டை போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.