அந்தியூரில் திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளா்
அந்தியூா் பேரூராட்சியில் 9ஆவது வாா்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்து கொண்டாா்.
அந்தியூா் பேரூராட்சியில் 9ஆவது வாா்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்து கொண்டாா்.
அந்தியூா் பேரூராட்சி, 9ஆவது வாா்டு கவுன்சிலா் பதவிக்கு அதிமுக சாா்பில் என்.பழனிவேல் போட்டியிடுகிறாா். இவா், மனு தாக்கல் செய்த பின்னா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தாா். இந்நிலையில், அக்கட்சியில் இருந்து திடீரென விலகி, அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் முன்னிலையில் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தாா்.
இவருடன், அதிமுக நிா்வாகிகள் பிரகாஷ், சண்முகம் உள்ளிட்ட பலரும் திமுகவில் இணைந்தனா். இவா்களுக்கு சால்வை அணிவித்து திமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். அந்தியூா் பேரூராட்சிக்கு சனிக்கிழமை தோ்தல் நடைபெறும் நிலையில் அதிமுக வேட்பாளா், திமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.