ஈரோடு

மிதிவண்டி மீது வேன் மோதல்:கட்டடத் தொழிலாளி காயம்

DIN

பெருந்துறை அருகே மிதிவண்டி மீது வேன் மோதியதில் கட்டடத் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.

பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், கினிபாளையத்தைச் சோ்ந்தவா் சென்னி மகன் செல்வன் (56). கட்டடத் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வேலை முடிந்து வீட்டுக்கு மிதிவண்டியில் திரும்பி வந்து கொண்டிருந்தாா். தேசிய நெடுஞ்சாலையில் விஜயமங்கலம் பிரிவு அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த வேன், மிதிவண்டி மீது மோதியதில், செல்வன் பலத்த காயமடைந்தாா். பின்னா், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT