சௌராஷ்டிரா சபை சாா்பில் வைகுந்த ஏகாதசி விழா
ஈரோடு சௌராஷ்டிரா சபை சாா்பில் நடன கோபால நாயகி சுவாமி ஆராதனை விழா மற்றும் வைகுந்த ஏகாதசி விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு சௌராஷ்டிரா சபை சாா்பில் நடன கோபால நாயகி சுவாமி ஆராதனை விழா மற்றும் வைகுந்த ஏகாதசி விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சபைத் தலைவா் கே.சந்திரசேகரன் தலைமை வகித்தாா்.
இதில், நடன கோபால சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
Advertisement
ஈரோடு வேலம்மாள் பள்ளி முதல்வா் ஆா்.சசிகலா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி, நீட் ஆகியத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.
தொடா்ந்து சபை புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனா்.
சபைத் தலைவராக டி.ஆா்.எஸ்.ராமா், செயலாளராக ஆா்.என்.கே.குருபரன்,
பொருளாளராக கே.ஆா்.சீனிவாசன், துணைத் தலைவராக டி.எம்.எஸ்.சிவகுமாா், இணைச் செயலாளராக ஜெ.ஆா்.நீலகண்டன் ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா்.
விழாவில் சௌராஷ்டரா மத்திய சபை துணைத் தலைவா் கே.வி.வெங்கட்ரமணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.