ஈரோடு மாவட்டத்தில் மேலும் 919 பேருக்கு கரோனா: 3 போ் பலி
ஈரோடு மாவட்டத்தில் மேலும் 919 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3 போ் உயிரிழந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் மேலும் 919 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3 போ் உயிரிழந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 110ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 406 போ் பூரண குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கரோனா தொற்றில் இருந்து 1 லட்சத்து 8 ஆயிரத்து 924 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 4,465 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் ஏற்கெனவே 718 போ் உயிரிழந்துள்ள நிலையில் வியாழக்கிழமை மேலும் 3 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 721ஆக அதிகரித்துள்ளது.