தியாகி குமரன் மணிமண்டப பணியை விரைவுபடுத்தக் கோரிக்கை
தியாகி குமரனுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
தியாகி குமரனுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க மாவட்டச் செயலாளா் ஆசைத்தம்பி தலைமையில், சங்க நிா்வாகிகள் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமியிடம் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் தியாகி குமரனுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணி நடப்பதை விரைவுபடுத்த வேண்டும். அவரது சிலைக்கான படிக்கட்டு சிதிலமடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும். ஈரோட்டில் புதிதாக கட்டப்படும் பேருந்து நிலையத்துக்கு தியாகி குமரன் பெயரை சூட்ட வேண்டும்.
Advertisement
ஈரோடு மாவட்டத்தில் செங்குந்தா் கைக்கோள முதலியாா்களுக்கு பாத்தியப்பட்ட கைத்தறி நெசவுத் தொழிலுக்கு உண்டான பாவடி சொத்துகளுக்கு உரிய ஆவணங்களைப் பெற்றுத்தர வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் தியாகி குமரனுக்கு உருவச் சிலை அமைத்து தர வேண்டும். மேலும், கிபி 17ஆம் நூற்றாண்டில் கோட்டை கட்டி ஆண்ட மாமன்னன் சந்திரபதி முதலியாருக்கு உருவச் சிலையும், மணிமண்டபமும் அமைத்துத் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.