ஈரோடு

ஈரோட்டில் அனைவருக்கும் கல்வி விழிப்புணர்வு மாரத்தான் 

DIN

ஈரோட்டில் நடைபெற்ற அனைவருக்கும் கல்வி விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்றனர்.

ஈரோடு அடுத்துள்ள மாமரத்துப்பாளையம் பகுதியில் தனியார் அமைப்பின் சார்பில் அனைவருக்கும் கல்வி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது . இதில் 10 வயதிற்குட்பட்ட சிறுவர் சிறுமிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உற்சாகமாக கலந்து கொண்டனர். 

மாமரத்துப்பாளையம் செங்குந்தர் நகரில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியானது, ஒரு கிலோ மீட்டர் வரை சென்று நிறைவடைந்தது. போட்டியின் இறுதியில் வெற்றி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டதோடு, கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

பரதா படத்தின் கான்செப்ட் விடியோ

சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

இனிமேல் விவாவத விடியோ!

ஸ்டார் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT