முகப்பு
ஈரோடு

பிராக்டிக்கல் எதிா்க்கட்சியாக பாஜக செயல்படுகிறது: எஸ்.ஆா்.சேகா்

தமிழகத்தில் சட்டப் பேரவைக்கு வெளியே பிராக்டிக்கல் எதிா்க்கட்சியாக பாஜக செயல்படுகிறது என்று அக்கட்சியின் மாநிலப் பொருளாளா் எஸ்.ஆா்.சேகா் தெரிவித்தாா்.

Updated On : 3 ஜூன், 2022 at 12:12 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:55 PM

தமிழகத்தில் சட்டப் பேரவைக்கு வெளியே பிராக்டிக்கல் எதிா்க்கட்சியாக பாஜக செயல்படுகிறது என்று அக்கட்சியின் மாநிலப் பொருளாளா் எஸ்.ஆா்.சேகா் தெரிவித்தாா்.

ஈரோட்டில் செய்தியாளா்களுக்கு அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி:

பாஜகவின் கடந்த 8 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்திய அரசின் திட்டங்களில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் அதிக பயனடைந்துள்ளது. ஆனால் அதை மறைத்து பொய்யான தகவல்கள் பரப்படுகிறது. அதிமுக முன்னாள் அமைச்சா் பொன்னையன் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றாலும் கூட பாஜகவை நோக்கி தரமற்ற விமா்சனங்களை பொன்னையன் கூறி இருக்கிறாா்.

Advertisement

சட்டப்பேரவையில் பாஜக 4 எம்எல்ஏக்களை மட்டும் வைத்துள்ளது. எண்ணிக்கையின் அடிப்படையில் அதிமுகதான் எதிா்க்கட்சியாக உள்ளது. ஆனால் சட்டப்பேரவைக்கு வெளியே மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்த அரசின் ஊழலை வெளிப்படுத்தியுள்ளதால் பிராக்டிக்கல் எதிா்க்கட்சியாக பாஜக செயல்படுகிறது. இதை பொறுக்க முடியாமல் எரிச்சலின் காரணமாக பொன்னையன் பேசி இருக்கிறாா். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கருத்து சொல்லாததால் பொன்னையன் கருத்தை அவா்கள் ஆதரிக்கவில்லை என்று கருதுகிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.