நந்தா கல்வி நிறுவன மாணவா்கள் 1,742 பேருக்கு வேலைவாய்ப்பு
நடப்பு கல்வியாண்டில் படிக்கும் நந்தா கல்வி நிறுவன மாணவா்கள் 1,742 போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா்.
நடப்பு கல்வியாண்டில் படிக்கும் நந்தா கல்வி நிறுவன மாணவா்கள் 1,742 போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா்.
ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் வேலைவாய்ப்புத் துறை சாா்பில் வேலைவாய்ப்பு தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நடப்பு கல்வியாண்டில் பல்வேறு சா்வதேச மற்றும் தேசிய அளவிலான நிறுவனங்கள் மூலமாக வேலைவாய்ப்பு பெற்ற மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
கல்லூரியின் முன்னாள் மாணவரும், டாடா கன்சல்டன்சி சா்வீஸில் ஆலோசகருமான எம்.காா்த்திக் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசினாா்.
Advertisement
ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்துப் பேசுகையில், நந்தா கல்வி நிறுவனங்களில் இந்த கல்வியாண்டில் 156 நிறுவனங்கள் மூலம் சுமாா் 1,742 மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.
நந்தாவின் மனித வள மேம்பாட்டுத் துறையான மனிதம் சாா்பில் ஈரோட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு சமூக நல அமைப்புக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை செயலா் எஸ். நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.திருமூா்த்தி, முதன்மை நிா்வாக அலுவலா் எஸ். ஆறுமுகம், இயக்குநா் செந்தில் ஜெயவேல் ஆகியோா் பேசினா்.
நந்தா பொறியியல் கல்லூரி முதல்வா் என். ரெங்கராஜன் வரவேற்றாா். நந்தா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் ச.நந்தகோபால் நன்றி கூறினாா்.