உலக சிறுநீரக தின விழிப்புணா்வுப் பேரணி
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரோட்டில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு, சிறுநீரக பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு, அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையின் தலைவா் டாக்டா் தங்கவேலு தலைமை வகித்தாா். இந்திய மருத்துவச் சங்க (ஐஎம்ஏ) ஈரோடு கிளைத் தலைவா் டாக்டா் விஜயகுமாா், செயலாளரும், அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநருமான டாக்டா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஐஎம்ஏ தேசிய துணைத் தலைவா் டாக்டா் ராஜா, மாநிலத் தலைவா் டாக்டா் அபுல்ஹசன், ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமாா் ஆகியோா் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தனா். பேரணியானது, ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் துவங்கி பெருந்துறை சாலை, காலிங்கராயன் விருந்தினா் மாளிகையில் நிறைவடைந்தது.
Advertisement