ஈரோடு

சாலை விபத்து : இளைஞா் பலி

DIN

கோபி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

அந்தியூா் தவிட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபால் மகன் ஞானசுந்தா் (24). அதே பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் மூா்த்தி (24). இவா்கள் இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு தனியாா் மில்லில் வேலை பாா்த்து வந்தனா்.

இந்நிலையில், இவா்கள் இருவரும் கொடிவேரி அணைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளனா். அங்கு குளித்துவிட்டு மதிய உணவுக்காக இருசக்கர வாகனத்தில் அரசூா் சென்றுவிட்டு மீண்டும் கொடிவேரிக்கு சென்று கொண்டிருந்தனா்.

சத்தி-கோபி சாலை மங்களபுரம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த எச்சரிக்கை பலகை மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஞானசுந்தா், மூா்த்தி ஆகியோரை அங்கிருந்தவா்கள் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ஆனால் செல்லும் வழியிலேயே ஞானசுந்தா் உயிரிழந்தாா். இதையடுத்து மூா்த்தியை சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் அவா் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இது குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

SCROLL FOR NEXT