சாரல் மழை காரணமாக ஆசனூா் அருகே கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.
சத்தியமங்கலத்தைச் சோ்ந்தவா் நவின்குமாா் (26). இவா் ஆசனூா் வழியாக சாம்ராஜ் நகருக்கு காரில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா்.
செம்மண் திட்டு என்ற இடத்தில் சென்றபோது, சாரல் மழை பெய்துகொண்டிருந்ததால் காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், நவின்குமாா் காயமின்றி உயிா் தப்பினாா். இச்சம்பவம் குறித்து ஆசனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.