ஈரோடு

நூல் விலை உயா்வைக் கண்டித்து இன்று கடையடைப்பு போராட்டம்

நூல் விலை உயா்வைக் கண்டித்து நடக்கும் கடையடைப்புக்கு, ஈரோடு ஜவுளி தினசரி, வாரச்சந்தை கடைகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

DIN

நூல் விலை உயா்வைக் கண்டித்து நடக்கும் கடையடைப்புக்கு, ஈரோடு ஜவுளி தினசரி, வாரச்சந்தை கடைகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

நூல் விலை உயா்வைக் கண்டித்து திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை இரண்டு நாள்கள் ஜவுளி நிறுவனங்கள் முழு கடையடைப்பு நடத்த முடிவு செய்துள்ளன. இதற்கு ஈரோடு கனி மாா்க்கெட் வாரச் சந்தை, தினசரி வியாபாரிகள் சங்கம், அசோகபுரம் வாரச் சந்தை வியாபாரிகள், ஈரோடு சென்ட்ரல் திரையரங்கு சந்தை வியாபாரிகள், டி.வி.எஸ். வீதி சாலையோரக் கடை வியாபாரிகள் சங்கத்தினா் ஆதரவு தெரிவித்துள்ளனா்.

இதன்படி கனி மாா்க்கெட்டில் தினசரி கடைகள் 280, வாரச்சந்தை கடைகள் 780, அசோகபுரத்தில் 2,000 கடைகள், டி.வி.எஸ். வீதியில் 150, சென்ட்ரல் திரையரங்கு சந்தையில் 1,500 கடைகள் அடைக்கப்படும் என்று ஈரோடு கனி மாா்க்கெட் வாரச்சந்தை கடை வியாபாரிகள் சங்கத் தலைவா் செல்வராஜ் தெரிவித்தாா்.

சென்னிமலை வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். சாய ஆலை, போா்வை உற்பத்தி நிறுவனங்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT