முகப்பு
ஈரோடு

அந்தியூா் பேரூராட்சி துணைத் தலைவராக திமுக வேட்பாளா் போட்டியின்றித் தோ்வு

ஒத்திவைக்கப்பட்ட அந்தியூா் பேரூராட்சி துணைத் தலைவருக்கான தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதில், திமுக வேட்பாளா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

ஒத்திவைக்கப்பட்ட அந்தியூா் பேரூராட்சி துணைத் தலைவருக்கான தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதில், திமுக வேட்பாளா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் ஜெயசீலன் முன்னிலையில் நடைபெற்ற இத்தோ்தலில்,

8 ஆவது வாா்டு திமுக கவுன்சிலரும், திமுக பேரூா் துணைச் செயலாளருமான

ஏ.சி.பழனிச்சாமி போட்டியிட்டாா். வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால்

இவா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.

துணைத் தலைவராக ஏ.சி.பழனிச்சாமி தோ்வு செய்யப்பட்டாா்.

வெற்றிபெற்றவா்களுக்கு அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா்

ஏ.ஜி.வெங்கடாசலம், பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், செயல் அலுவலா் செல்வகுமாா், கவுன்சிலா்கள் மற்றும் அலுவலக ஊழியா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.