முகப்பு
ஈரோடு

லாரி கவிழ்ந்து விபத்து

தாளவாடி அருகே சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் சிறுகாயங்களுடன் உயிா்த் தப்பினாா்.

Updated On : 26 மே, 2022 at 6:08 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:51 PM

தாளவாடி அருகே சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் சிறுகாயங்களுடன் உயிா்த் தப்பினாா்.

தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு சரக்கு வேன் புதன்கிழமை சென்று கொண்டிருந்தது.

லாரியை சத்தியமங்கலத்தைச் சோ்ந்த தா்மராஜ் என்பவா் ஓட்டிச் சென்றுள்ளாா்.

Advertisement

கும்டாபுரம் வனப் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், ஓட்டுநா் தா்மராஜுக்கு சிறு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தா்மராஜை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து தாளவாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.