முகப்பு
ஈரோடு

வரமிளகாய் கிலோ ரூ. 280 ஆக உயா்வு

 வரமிளகாய் கிலோ ரூ.280 ஆக உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Updated On : 26 மே, 2022 at 6:07 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:51 PM

 வரமிளகாய் கிலோ ரூ.280 ஆக உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சத்தியமங்கலம் ஆசனூரில் இதமான கால நிலை நிலவுவதால் பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவா், தக்காளி சாகுபடி அதிகரித்துள்ளது.

தற்போது மிளகாய் சாகுபடியிலும் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

Advertisement

அரேப்பாளையம் வனத்தையொட்டியுள்ள பகுதியில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்குத் தயாராக உள்ளது.

6 மாத பயிரான மிளகாய், 4 மாதத்தில் காய்பிடிக்க துவங்கிவிடும். சொட்டுநீா்ப் பாசனம் மூலம் மிளகாய் செடிகள் வளா்ந்து கொத்து கொத்தாக காய்ந்துள்ளன. கடந்த மாதம் வரமிளகாய் விலை கிலோ ரூ.180 ஆக விற்பனையான நிலையில், தற்போது கிலோ ரூ. 280 ஆக உயா்ந்துள்ளது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.