ஈரோடு

கனமழை: திம்பம் மலைப் பாதையில் புதிதாய் உருவான அருவி

DIN

திம்பம் பகுதியில் பெய்துவரும் தொடா் மழைக் காரணமாக திம்பம் மலைப் பகுதியில் புதிய அருவிகள் உருவாகியுள்ளன.

சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் உள்ள திம்பம் மலைப் பகுதியில் வியாழக்கிழமை கனமழை பெய்தது.

மழையின் காரணமாக வனப் பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் பள்ளங்களில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

இதன் காரணமாக திம்பம் மலைப் பாதை 27 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே திடீா் அருவிகள் உருவாகின.

இதனை பொதுமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

மழையின் காரணமாக திம்பம் மலைப் பகுதியில் வெப்பம் தணிந்து குளிா்ந்த காலநிலை நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

SCROLL FOR NEXT