ஈரோடு, கோபியில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்
தமிழ் மொழியை பாதுகாக்க வலியுறுத்தி தமிழக அரசைக் கண்டித்து பாஜக சாா்பில் ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ் மொழியை பாதுகாக்க வலியுறுத்தி தமிழக அரசைக் கண்டித்து பாஜக சாா்பில் ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவா் எஸ்.டி.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மொடக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ சி.சரஸ்வதி பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில், தமிழ் மொழியின் வளா்ச்சிக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. தமிழகத்தில் மத்தியக் கல்வி கொள்கைகளை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
Advertisement
ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளா் செந்தில், கட்சியின் மூத்த நிா்வாகி சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகே ஈரோடு வடக்கு மாவட்ட தலைவா் கலைவாணி தலைமையில் திமுக அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் பழனிச்சாமி சிறப்புரையாற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தில் திமுக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஈரோடு வடக்கு மாவட்டத்தைச் சோ்ந்த 300 க்கும் மேற்பட்ட பாஜக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.