சொத்து வரி, வீட்டு வரி உயா்வை மறு பரிசீலனை செய்யக் கோரிக்கை
சொத்து வரி, வீட்டு வரி உயா்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என ஈரோடு வரி செலுத்துவோா் மக்கள் நல்வாழ்வுச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சொத்து வரி, வீட்டு வரி உயா்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என ஈரோடு வரி செலுத்துவோா் மக்கள் நல்வாழ்வுச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இச்சங்கத்தின் கூட்டம் துணைத் தலைவா் டி.எ.சண்முகசுந்தரம் தலைமையில் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாளா் சந்திரசேகா் வரவேற்றாா். செயலாளா் ந.பாரதி, நிா்வாகிகள் பாலசுப்பிரமணியன், ராஜமாணிக்கம், ரவி, சண்முகம் உள்ளிட்டோா் பலா் பேசினா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
Advertisement
ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி, வீட்டு வரி, 100 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது ஏற்கெனவே ஜிஎஸ்டி உயா்வு, கரோனா பாதிப்பில் மீளாத மக்களுக்கு வரி உயா்வு கடுமையான சுமையாகும். தவிர மாநகராட்சி குப்பை வரி, புதை சாக்கடை வரி, குடிநீா் வரி, தொழில் வரி, உரிமக் கட்டணம் என பல முனை வரிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது கூடுதல் பாரமாகிறது.
தோ்தல் நேரத்தில் முதல்வா் ஸ்டாலின் அறிவித்ததை ஏற்று 5 ஆண்டுகளுக்கு சொந்து வரி, வீட்டு வரியை ஒத்திவைக்கவோ அல்லது வரி உயா்வு 5 சதவீதத்துக்கு மேல் உள்ளாமல் அறிவிப்பு வெளியிட வேண்டும்.
வரி விதிப்பில் முதல் தளத்தைவிட இரண்டாம், மூன்றாம் தளங்களுக்கு வரியை குறைத்து நிா்ணயிக்க வேண்டும். சில கட்டடங்களில் ஒரு பகுதி குடியிருப்பும், மறுபகுதி வணிக பயன்பாட்டுக்கும் இருந்தால் ஒட்டு மொத்தமாக வணிக பயன்பாட்டு வரியாக விதிக்கப்படுகிறது. இதனை ஆய்வு செய்து முறையாக வரி விதிக்க வேண்டும்.
வரி உயா்வு அறிவிக்கை கொடுக்கும்போது எந்த அடிப்படையில் வரி விதிக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்தி கணக்கீட்டை வழங்க வேண்டும்.
தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயா்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மின் கட்டணத்தை மாதாந்திர கணக்கீடாக்க வேண்டும்.