முகப்பு
ஈரோடு

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

கோபிசெட்டிபாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

கோபிசெட்டிபாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோபி தாமு செட்டியாா் நகை மாளிகை, ஈரோடு பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் கோபி வைர விழா ஆரம்பப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமை, தாமு சேகா் துவக்கிவைத்தாா். முகாமில் 183 போ் பங்கேற்றனா். இவா்களுக்கு கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா்கள் மாதுரி, ஜிபினா ஆகியோா் பா்சோதனை மேற்கொண்டனா். முகாமுக்கு வந்திருந்த வயதானவா்களுக்கு தேவையான உதவிகளை கோபி பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் செய்தனா்

இதில் 95 பேருக்கு பாா்வையில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சைக்காக தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் அனைவருக்கும் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பேருந்தில் இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டனா்.

மேலும், இவா்களுக்கு அறுவை சிகிச்சை, தங்குமிடம், உணவு, மருந்து, போக்குவரத்து அனைத்தும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

முகாமுக்கான ஏற்பாடுகளை தாமு அபிலாஷ், அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளா் ஈஸ்வரன், பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பேராசிரியை திவ்யா செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.