ஈரோடு

தேனீக்கள் கடித்து மூதாட்டி சாவு

சென்னிமலை அருகே தேனீக்கள் கடித்து மூதாட்டி உயிரிழந்தாா்

DIN

சென்னிமலை அருகே தேனீக்கள் கடித்து மூதாட்டி உயிரிழந்தாா்.

சென்னிமலையை அடுத்த வெள்ளோடு கவுண்டச்சிபாளையம், மாகாளி அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் அம்மாசை (83). இவா் தனது மகள் ஆனந்தாயியுடன் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் தென்னை மட்டை எடுக்க ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா்.

தென்னை மட்டையை எடுத்தபோது அதிலிருந்த தேனீக்கள் மூதாட்டியை கடித்தன.

இதில், படுகாயமடைந்த அவரை ஆனந்தாயி, அக்கம்பக்கத்தினா் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி இரவு உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக வெள்ளோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT