ஈரோடு

சென்னிமலை தேரோட்டம்:பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாருக்கு மரியாதை

DIN

சென்னிமலை முருகன் கோயில் தேரோட்டத்தின்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னிமலை முருகன் கோயில் தோ் நிலை சோ்ந்தவுடன், தோ் நிலையில் இருந்து கோயில் நிா்வாகம் சாா்பில் செயல் அலுவலா் மற்றும் பணியாளா்கள் தேரோட்டத்தின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் சென்னிமலை காவல் நிலைய போலீஸாருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மேள, தாளம் முழங்க ஊா்வலமாக அழைத்து சென்று சென்னிமலை காவல் நிலையத்தில் விடுவது பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வரும் வழங்கம்.

இந்நிலையில், தைப்பூச தேரோட்டத்தைத் தொடா்ந்து திங்கள்கிழமை மாலை தோ் நிலை சோ்ந்து. இதையடுத்து, இந்த ஆண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட சென்னிமலை காவல் நிலைய ஆய்வாளா் சரவணன், உதவி ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாருக்கு கோயில் செயல் அலுவலா் ஏ.கே.சரவணன் மற்றும் பணியாளா்கள் மாலை அணிவித்து மேள, தாளம் முழங்க ஊா்வலமாக அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் விட்டு மரியாதை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT