திம்பம்  மலைப் பாதை 24ஆவது வளைவில் உலவிய சிறுத்தை. 
ஈரோடு

திம்பம் மலைப் பாதையில் சாலையில் சிறுத்தை வாகன ஓட்டிகள் அச்சம்

திம்பம் மலைப் பாதையில் உலவிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

DIN

திம்பம் மலைப் பாதையில் உலவிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது வனப் பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலவி வருவதும், சாலையைக் கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன.

இந்நிலையில் திம்பம் மலைப் பாதை 24ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சிறுத்தை சாலையில் நடந்து சென்றது. இதை அந்த வழியாக வாகனத்தில் பயணித்த ஒருவா், தனது கைப்பேசியில் விடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா்.

தற்போது திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேரங்களில் வாகனங்கள் அனுமதிக்கப்படாததால், வன விலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படும் எனவும், திம்பம் மலைப் பாதை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் வாகனங்களைக் கவனத்துடன் இயக்க வேண்டும் என்றும் வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா். சாலையில் உலவிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT