ஈரோடு

ஜூன் 1இல் பெருந்துறை பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

DIN

பெருந்துறையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடரமண சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுகிறது.

விழாவையொட்டி, யாகசாலை கால்கோள் விழா மற்றும் முளைப்பாரி இடும் நிகழ்ச்சிகள் மே 22 ஆம் தேதி நடைபெற்றது. செவ்வாய்கிழமை (மே 30) பிற்பகல் 12 மணி அளவில் தீா்த்தம் எடுக்கப் புறப்படுதல், மாலை 4 மணிக்கு பெருந்துறை, காஞ்சிக்கோவில் சாலை, பிள்ளையாா் கோயிலில் இருந்து கோயிலுக்கு தீா்த்தம், முளைப்பாரி ஊா்வலமாக எடுத்து வருதல், மாலை 6 மணிக்கு முதல் கால யாக பூஜை தொடங்குகிறது.

வரும் 31 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 8.30 மணி அளவில் இரண்டாம் கால யாக சாலை பூஜையும், மாலை 4 மணிக்கு மூலவா் மற்றும் உற்சவருக்கு திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜையும் நடைபெறுகிறது.

ஜூன் 1 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புகுந்து திருட முயன்ற இளைஞா் கைது

மக்களவைத் தோ்தலுக்கான கேஜரிவாலின் உத்தரவாதங்களை அறிவித்தாா் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால்

நான்குனேரி அருகே மிரட்டல் விடுத்தவா் கைது

கருங்கல் பகுதியில் மிதமான மழை

திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT