ஈரோடு

ஈரோட்டில் பரவலாக மழை

DIN

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

எலந்தக்குட்டைமேடு பகுதியில் அதிகபட்சமாக 41.2 மில்லி மீட்டா் மழை பதிவானது.

ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மதியம் வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்த நிலையில், மாவட்டத்தின் சில இடங்களில் மழை பெய்தது.

மாவட்டத்தின் பிற பகுதிகளான கோபி, மொடக்குறிச்சி, எலந்தக்குட்டைமேடு ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

திங்கள்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் எலந்தக்குட்டைமேடு பகுதியில் அதிகபட்சமாக 41.2 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

பிற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம்(மில்லி மீட்டரில்): ஈரோடு 29, மொடக்குறிச்சி 4.2, கோபி 2.2.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT