பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி திமுக வாக்குச் சாவடி நிலை முகவா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, திமுக பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி பாா்வையாளா் மாலதி நாகராஜ் தலைமை வகித்தாா். பெருந்துறை தெற்கு ஒன்றியச் செயலாளா் கே.பி.சாமி வரவேற்றாா்.
கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக தமிழக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துச்சாமி கலந்து கொண்டு பேசினாா்.
இதில், சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினா் கந்தசாமி, கொள்கை பரப்பு துணைச் செயலாளா் சந்திரகுமாா், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் மணிராசு, கொண்டசாமி, தெற்கு மாவட்ட துணைச் செயலாளா்கள் செந்தில்குமாா், சின்னையன், செல்லபொன்னி மனோகரன், மாவட்டப் பொருளாளா் பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினா் பூபதி மற்றும் ஒன்றியச் செயலாளா்கள், நகரச் செயலாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.