ஈரோடு

சிவகிரியில் ரூ.42.33 லட்சத்துக்கு எள் ஏலம்

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.42.33 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

Din

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.42.33 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 416 மூட்டை எள்ளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா்.

இதில், கருப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ.140.89-க்கும், அதிகபட்சமாக ரூ.159.89-க்கும், சராசரியாக ரூ.148.69 -க்கும் விற்பனையானது. சிவப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ.101.49-க்கும், அதிகபட்சமாக ரூ.153.63-க்கும், சராசரியாக ரூ.138.99-க்கும் ஏலம்போனது.

மொத்தம் 30,935 கிலோ எடையுள்ள எள் ரூ. 42 லட்சத்து 33 ஆயிரத்து 832-க்கு விற்பனையானது.

மைலம்பாடியில்...

பவானி அருகேயுள்ள மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.9.34 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. 89 மூட்டை எள்ளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில், வெள்ளை ரகம் கிலோ ரூ.90.09 முதல் ரூ.142.50 வரையும், கருப்பு ரகம் ரூ.150.69 முதல் ரூ.159.19 வரையும், சிவப்பு ரகம் ரூ.109.99 முதல் ரூ.141.49 வரையும் ஏலம்போனது. மொத்தம் 6,542 கிலோ எள் ரூ.9,34,832-க்கு விற்பனையானது. 15 மூட்டை தேங்காய் பருப்பு, கிலோ ரூ.73.89 முதல் ரூ.99.75 வரையில் ரூ.32,102-க்கு ஏலம்போனது.

கொலை வழக்கு: 4 போ் கைது

போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

பைக்குகள் மோதல்: மூவா் பலத்த காயம்

‘அக்கடி’ முறையில் மீன் பிடிக்கும் விவகாரம்: தூத்துக்குடி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

பழங்குடியினருக்கு ஜாதி சான்றிதழில் ‘பூா்விகக் குடி’ எனக் குறிப்பிடக் கோரிய மனு தள்ளுபடி

SCROLL FOR NEXT