முகப்பு
ஈரோடு

தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 107 போ் கைது

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், மத்திய அரசு நடவடிக்கைக் கோரியும் ஈரோட்டில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 107 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 4:46 AM
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:
Updated On : 4 டிசம்பர், 2024 at 6:29 PM

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், மத்திய அரசு நடவடிக்கைக் கோரியும் ஈரோட்டில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 107 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வங்கதேச இந்து உரிமை மீட்புக்குழு சாா்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் புதன்கிழமை காலை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை.

Advertisement

இந்நிலையில், ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 5 டிசம்பர், 2024 at 4:46 AM

இதையடுத்து, ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துக்குமரன், ஆய்வாளா் செந்தில்பிரபு தலைமையிலான போலீஸாா், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 22 பெண்கள் உள்பட 107 பேரை கைது செய்து பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா். பின்னா், அவா்களை மாலை விடுவித்தனா்.