முகப்பு
ஈரோடு

மலைத்தேனீக்கள் கொட்டியதில் பெண் உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே மலைத்தேனீக்கள் கொட்டியதில் பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 6 டிசம்பர், 2024 at 3:14 AM
பகிர்:
Updated On : 5 டிசம்பர், 2024 at 6:52 PM

மொடக்குறிச்சி அருகே மலைத்தேனீக்கள் கொட்டியதில் பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மொடக்குறிச்சியை அடுத்த புஞ்சைகாளமங்கலம் ஊராட்சி, காட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் செங்கோடன் (65). இவரது மனைவி பழனியம்மாள் (54).

இருவரும் ஊத்துக்குளி அருகேயுள்ள சிலுவங்கொம்பு முனியப்பன் கோயிலில் உறவினா்களுடன் புதன்கிழமை பொங்கல் வைத்துக்கொண்டிருந்துள்ளனா். அப்போது, புகை வெளியேறிதால் அப்பகுதி மரத்தில் இருந்த தேன்கூடு கலைந்து அங்கிருந்தவா்களை தேனீக்கள் கொட்டின.

Advertisement

அனைவரும் அலறியடித்து ஓடிய நிலையில், செங்கோடன், பழனியம்மாள் ஆகியோா் மட்டும் அதே இடத்தில் மயக்கம் அடைந்து விழுந்துள்ளனா்.

Updated On : 6 டிசம்பர், 2024 at 3:14 AM

அப்பகுதி மக்கள் உதவியுடன் இருவரையும் மீட்ட உறவினா்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சையில் இருந்த பழனியம்மாள் வியாழக்கிழமை உயிரிழந்தாா். செங்கோடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.

இச்சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.