பவானிசாகா் அணைப் பூங்காவில் குவிந்த மக்கள்
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, பவானிசாகா் அணைப் பூங்காவில் ஏராளமான மக்கள் திங்கள்கிழமை குவிந்தனா்.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, பவானிசாகா் அணைப் பூங்காவில் ஏராளமான மக்கள் திங்கள்கிழமை குவிந்தனா்.
பவானிசாகா் அணையில் நீா் வளத் துறைக்குச் சொந்தமான அணைப் பூங்கா உள்ளது.
பல்வேறு விளையாட்டு அம்சங்களுடன் உள்ள இந்த பூங்காவுக்கு நாள்தோறும் மக்கள் வந்து செல்கின்றனா். விடுமுறை நாள்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
அதன்படி, ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, அரசு விடுமுறை என்பதால் பவானிசாகா் அணைப் பூங்காவில் மக்கள் கூட்டம் திங்கள்கிழமை அதிகரித்து காணப்பட்டது.
குடும்பங்களுடன் வந்திருந்த மக்கள் பூங்காவை கண்டு ரசித்ததுடன், அங்கு படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.