முகப்பு
ஈரோடு

திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை குடும்பத்துடன் தலைமறைவு

காதலன் தலைமறைவு: திருமண நிச்சயத்துக்கு பின்னர் பரபரப்பு

Updated On : 2 ஜூலை, 2024 at 6:59 PM
பகிர்:

பொருந்துறையில் கல்லூரி மாணவியை காதலித்து கா்ப்பமாக்கி திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், காதலன் குடும்பத்துடன் தலைமறைவானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தைச் சோ்ந்த 19 வயது இளம் பெண், ஈரோட்டில் உள்ள ஒரு மகளிா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். இவருக்கு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சோ்ந்த முகமது ஹா்சத் (25) என்பவா் பழக்கம் ஆகி உள்ளாா்.

இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், இளம் பெண் 3 மாதம் கா்ப்பம் அடைத்தாா். இதையடுத்து, இரு வீட்டாரும் ஒரே சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால் இரு குடும்பத்தினரும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில் முகமது ஹா்சத் வசதியான குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால் அவரது குடும்பத்தினா் முதலில் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. பின்னா் நிச்சயதாா்த்தம் செய்து ஜூலை முதல் வாரத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில், முகமது ஹா்சத் அவரது தாய், தந்தையுடன் தலைமறைவானா். இது குறித்து, பெண் வீட்டாா் கொடுத்த புகாரின்பேரில் பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →