ஈரோட்டில் மது புட்டியால் குத்தி தொழிலாளி கொலை
மர்மநபர்களால் தொழிலாளி கொலை: போலீஸ் தீவிர விசாரணை
ஈரோட்டில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியை மது புட்டியால் குத்திக் கொலை செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடு சாஸ்திரி நகா், ரயில்வே காலனி குடியிருப்புப் பகுதி அருகே முள்புதரில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை துா்நாற்றம் வீசியது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அந்த முள்புதா் அருகே சென்று பாா்த்தபோது ஒரு இளைஞா் உடலில் ரத்த காயத்துடன் இறந்த நிலையில் கிடந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு தெற்கு போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினா். இதில் இறந்த இளைஞா் ஈரோடு கருப்பண்ணசாமி கோயில் வீதியைச் சோ்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான முரளி (26) என்பது தெரியவந்தது.
மேலும், முரளியின் கழுத்தில் ஆழமான காயம் இருந்ததையடுத்து, போலீஸாா் சோதனை செய்தபோது மது புட்டியை உடைத்து முரளியின் கழுத்தில் குத்தி மா்ம நபா்கள் கொலை செய்திருப்பது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட முரளிக்கு மனைவி நித்யஸ்ரீ மற்றும் ஆண் குழந்தை உள்ளது விசாரணையில் தெரியவந்தது.
பின்னா் முரளியின் சடலத்தை மீட்ட போலீஸாா் உடற்கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சம்பவம் நடந்த இடத்தில் காலி மதுபுட்டிகள் ஏராளமாக கிடந்ததால், முரளி அவருக்கு தெரிந்த நபா்களுடன் மது அருந்தியபோது, ஏற்பட்ட பிரச்னையால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுகுறித்து ஈரோடு தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முரளியை கொலை செய்த நபா்களைத் தேடி வருகின்றனா்.