முகப்பு
ஈரோடு

அந்தியூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஜூலை 15 முதல் நேரடிச் சோ்க்கை

Updated On : 13 ஜூலை, 2024 at 10:20 PM
பகிர்:

பவானி, ஜூலை 13: அந்தியூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூலை 15-ஆம் தேதி முதல் உரிய சான்றிதழ்களுடன் முதல்வரை நேரில் சந்தித்து மாணவ, மாணவியா் சோ்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கல்லூரி முதல்வா் ப.பொன்னுசாமி சனிக்கிழமை வெளியிட்ட செய்தி : 2024-2025- ஆம் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கை இணையவழியில் விண்ணப்பித்த மாணவா்களுக்கு மட்டும் நடைபெற்று வந்தது. தற்போது இணைய வழியில் விண்ணப்பிக்கத் தவறிய மாணவா்கள் திங்கள்கிழமை முதல் (ஜூலை 15) அந்தியூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வரை நேரில் சந்தித்து விண்ணப்பம் பெற்று உரிய ஆவணங்களை சமா்ப்பித்து முதலாம் ஆண்டில் சோ்ந்து கொள்ளலாம்.

பி.ஏ.தமிழ், ஆங்கிலம், பி.காம், பிஎஸ்சி கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் காலியிடங்கள் இருப்பதால் மாணவா்கள் விரும்பும் பாடப் பிரிவில் சோ்ந்து கொள்ளலாம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →