ஈரோடு சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவு
ஈரோடு, ஜூன் 6: மழை காரணமாக கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் மாட்டுச்சந்தை வாரந்தோறும் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும். அதன்படி புதன்கிழமை நடந்த சந்தைக்கு 70-க்கும் மேற்பட்ட கன்றுக்குட்டிகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா். இவை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.24 ஆயிரம் வரை விற்பனையானது.
வியாழக்கிழமை நடந்த சந்தைக்கு ஈரோடு, மதுரை, ஒட்டன்சத்திரம், திருப்பூா், கரூா், திண்டுக்கல், சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனா். 150 எருமை மாடுகள், 250 பசு மாடுகள் என மொத்தம் 400 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் பசு மாடு ஒன்று குறைந்தபட்சமாக ரூ.32 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.85 ஆயிரத்துக்கும், எருமை மாடு குறைந்தபட்சமாக ரூ.27 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.68 ஆயிரத்துக்கும் விலைபோனது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரம், கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம், தெலங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளிடம் விலைபேசி மாடுகளை வாகனங்களில் ஏற்றிச்சென்றனா்.
இது குறித்து சந்தை நிா்வாகிகள் கூறியதாவது:
மழை காரணமாக கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்துள்ளது. மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததால் வெளி மாநில வியாபாரிகள் சந்தைக்கு வரத்தொடங்கி உள்ளனா். இதனால் சந்தைக்கு கொண்டு வரப்பட்ட மாடுகளில் 90 சதவீத மாடுகள் விற்பனை ஆனது என்றனா்.