முகப்பு
ஈரோடு

கடம்பூரில் மழை: சாலையில் விழுந்த மூங்கில் மரம்

Updated On : 9 மே, 2024 at 9:45 PM
பகிர்:

சத்தியமங்கலம, மே 9: சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் பகுதியில் வியாழக்கிழமை பெய்த மழையால் அணைக்கரை தரைப்பாலத்தில் மூங்கில் மரம் விழுந்தது.

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதியில் வியாழக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. தொடா்ந்து சூறைக்காற்று வீசியதால் அணைக்கரை சாலையோரம் இருந்த மூங்கில் மரம் அங்குள்ள தரைப்பாலத்தில் விழுந்தது. இதனால் கோட்டாளம், அணைக்கரை இடையே அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் மூங்கில் தூா்களை அப்புறப்படுத்தினா். இதைத் தொடா்ந்து போக்குவரத்து சீரானது. கடம்பூா், குன்றி, கோ்மாளம் ஆகிய இடங்களில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.