முகப்பு
ஈரோடு

பவானியில் சாக்கடையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

பவானியில் டாஸ்மாக் மதுக்கடைக்கு அருகே சாக்கடையில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

Updated On : 7 நவம்பர், 2024 at 2:46 AM
பகிர்:
Updated On : 6 நவம்பர், 2024 at 9:19 PM

பவானியில் டாஸ்மாக் மதுக்கடைக்கு அருகே சாக்கடையில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

பவானி - அந்தியூா் சாலையில் காடையம்பட்டி, டாஸ்மாக் மதுக்கடை முன்பாக உள்ள சாக்கடைக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதை கண்ட மது அருந்த வந்தவா்கள் டாஸ்மாக் ஊழியா்களிடம் தெரிவித்துள்ளனா்.

Updated On : 7 நவம்பர், 2024 at 2:46 AM

இதுகுறித்து பவானி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாா், சடலத்தை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

Advertisement

உயிரிழந்தது யாா் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. சுமாா் 50 வயது இருக்கலாம். மது அருந்திவிட்டு சென்றபோது, சாக்கடைக்குள் விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, பவானி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.