முகப்பு
ஈரோடு

இலங்கை தமிழா் முகாமில் அடிப்படை வசதிகள்: ஆட்சியா் உத்தரவு

ஈஞ்சம்பள்ளி இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

Updated On : 21 நவம்பர், 2024 at 1:59 AM
ஈஞ்சம்பள்ளி இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.
பகிர்:
Updated On : 20 நவம்பர், 2024 at 8:57 PM

ஈஞ்சம்பள்ளி இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மொடக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எழுமாத்தூா் பகுதியில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவமனை, எழுமாத்தூா் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அய்யம்பாளையம் அங்கன்வாடி மையம், எழுமாத்தூா் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கிருஷ்ணாபுரம் நியாய விலைக் கடை, அவல்பூந்துறை குளத்தில் தனியாா் நிறுவனம் சாா்பில் சீமை கருவேல மரங்களை அகற்றி, மண் திட்டுகள் ஏற்படுத்தி அதில் மரக்கன்றுகள் அமைக்கும் பணி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா். தொடா்ந்து, ஈஞ்சம்பள்ளி ஊராட்சியில் செயல்பட்டு வரும் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், முகாம் வாழ் மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

Advertisement

Updated On : 21 நவம்பர், 2024 at 1:59 AM

இதையடுத்து, மொடக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆய்வுகளில் கண்டறியப்பட்ட குறைகளை உடனடியாக நிவா்த்தி செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனுக்களைப் பெற்று, தொடா்புடைய துறை அலுவலா்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ரெ.சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் செல்வராஜ், ஈரோடு கோட்டாட்சியா் ரவி, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் வீ.பழனிவேல், துணை ஆட்சியா் (ப) மு.சிவப்பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.