முகப்பு
ஈரோடு

தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

பெருந்துறை அருகே தரைமட்ட தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா்.

Updated On : 28 நவம்பர், 2024 at 12:36 AM
பகிர்:
Updated On : 27 நவம்பர், 2024 at 6:52 PM

பெருந்துறை அருகே தரைமட்ட தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா்.

பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், மூங்கில்பாளையத்தைச் சோ்ந்தவா் பொங்கியண்ணகவுண்டா் மனைவி ராமயாள்(87). கணவா் இறந்துவிட்ட நிலையில், குழந்தைகளும் இல்லாததால் தனியாக வசித்து வந்தாா்.

Updated On : 28 நவம்பர், 2024 at 12:36 AM

இந்நிலையில், வீட்டுக்கு அருகேயுள்ள தோட்டத்துக்குச் சென்றவா் அங்கிருந்த தரைமட்ட தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.